Wednesday, December 1, 2010

விக்கிலீக்ஸ் பற்றி

என்ன அது விக்கிலீக்ஸ்?

2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.

சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதாரதளமாக விக்கிலீக்ஸ் மாறி வருகிறது. மேலும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.

இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மூலம் பெற்று சேகரித்தது.

அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.

பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற பெருமையும் இதற்குண்டு.

ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.

இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.

இந்தியாவைப் பற்றி...

இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு முயன்று வருகிறது. இதனால் அதன் செயல்பாடுகள் குறித்துஅறிய இந்தியத் தூதர்களை உளவு பார்க்குமாறு ஹில்லாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூலை 31ம்தேதி ஹில்லாரி அமெரிக்கத் தூதர்களுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹில்லாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார்.

இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹில்லாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா.

மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது.

உலகத் தலைவர்களை கேவலமாக கிண்டலடித்த அமெரிக்கா

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது 'பெரியண்ணன்' அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். "பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

இதுதவிர பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் ஒழுங்கீனமான செயல்பாடுகளை தினந்தோறும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாஷிங்டனுக்கு அனுப்பி வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

"லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்...", என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, "இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்.." என்றும் கூறியுள்ளனர்.

'டாக் புடின்'

மேலும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுக்கு, 'அல்பா டாக்' என்ற நாயின் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக குறிப்பிட்டு, மாஸ்கோவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் தகவல்கள் பரிமாறிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.

ஈரான் ஹிட்லர்

ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை "ஹிட்லர்" என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.

பாகிஸ்தானிடம் தோற்ற அமெரிக்கா...

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.

மேலும் சீனாவுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தென் கொரியா மேற்கொண்ட முயற்சிகளை, அமெரிக்க உளவுத் துறை தடுத்து நிறுத்தியது பற்றிய தகவல்களும் அதில் வெளியிட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆப்கானிஸ்தான் துணை பிரதமர் சவூதி விமான நிலைத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலருடன் பிடிபட்டதும், பின்னர் அமெரிக்கா தலையிட்டு அந்த விவகாரத்தை தீர்த்து வைத்ததும் விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.

கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா...

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
Read: In English
இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் 'விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.

அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்!

Tuesday, November 30, 2010

நிரா ராடியா டேப் உரையாடல்கள்

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
இந்திய அரசியலைக் கலக்கும் நீரா ராடியாவும், அரசியல் தொடர்புகளும்
திங்கள்கிழமை, நவம்பர் 29, 2010, 16:13[IST] A A A Follow us on

Free Newsletter Sign up
Vote this article (3) (0)
Ads by Google
Samsung Smartphones www.in.SamsungMobile.com/SmartPhone
Introducing range of Smartphones to Choose. Official Website. Visit Now
டெல்லி: இந்திய அரசியலைக் கலக்கி வரும் நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர்களோ, பிசினஸ் தலைவர்களோ இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் நீரா ராடியா

முன்பு இவரது பெயர் நீரா சர்மா. இவரது தந்தை விமானத் துறையில் இருந்தவர். இவரது கணவர் பெயர் ஜனக் ராடியா. இவரை விவாகரத்து செய்து விட்டார். இவர் மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். ஜனக் ராடியா இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவர்.

லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.

1995ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

2000மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிஅதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார்.

2001ல்தான் தற்போது நடத்தி வரும் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லாததால்.

டாடா நானோ பிரச்சினை சிங்கூரில் வெடித்து வெளிக் கிளம்பியபோது அதைத் தணிக்கும் முயற்சியில் பல மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெறும் பிஆர் அதிகாரியாக இருந்து வரும் நீராவின் தொடர்புகளைப் பார்த்தால் மலைக்க வைக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் கூட நீராவின் பேச்சு புகுந்திருப்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு பல்வேறு பிரமுகர்களுடனும் வெகு சரளமான தொடர்பைப் பராமரித்து வந்துள்ளார் நீரா.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.

உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. ஆனால் இது அத்தோடு நிற்காது போலத் தெரிகிறது. ராடியா பல்வேறு பிரமுகர்களுடன் பேசியதொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது.

50 வயதுகளில் இருக்கும் நீரா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவரது தந்தை சர்மா கென்யாவில் வசித்து வந்தார். 70களில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். லண்டனில் இருக்கும்போதுதான் குஜராத்தைச் சேர்நத் ஜனக் ராடியாவை மணந்து கொண்டார் நீரா. பின்னர் அவர் மூலம் மூன்று மகன்கள் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். நீராவின் மகன்களில் ஒருவரான கரண், கடந்த 2003ம் ஆண்டு இந்தியா மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டவர் ஆவார். அப்போது நீராவின் பிசினஸ் பார்ட்னரான தீரஜ் சிங் என்பவரால் கரண் கடத்தப்பட்டார். தீரஜ் சிங், மறைந்த ஹரியானா முதல்வர் ராம் பிரேந்தர் சிங்கின் பேரன் ஆவார். அன்று முதலே மீடியா வெளிச்சத்தில் விழுந்தார் நீரா.

2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவேஅறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.

அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும்நீராவின்நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.

ஆனந்த்குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தனியாக ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்க கடுமையாக முயற்சித்தார் நீரா. ஆனால் அவருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனந்த்குமாருடன் நெருக்கமாக இருந்தபோதும் அது முடியாமல் போனது. இதேசமயத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை தொடங்க கடுமையாக முயன்றார் ரத்தன் டாடா. அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு காரணம் ஒரு தனி நபர்தான் என்று சமீபத்தில் ரத்தன் குற்றம் சாட்டியிருந்தார். அது வேறு யாரும் அல்ல ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல்தான். டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டம் அனுமதி பெறாமல் நரேஷ் கோயல் தடுத்ததாக அப்போதே பலத்த குற்றச்சாட்டு இருந்தது. நரேஷ் கோயலின் வேலையால் நீராவும் பாதிக்கப்பட்டார்.

அதன் பின்னர்தான் டாடாவுடன் நெருங்கினார் நீரா. டாடா குழும மக்கள் தொடர்புப் பணிகள் நீராவிடம் சென்றன. நுஸ்லி வாடியாவின் சிபாரிசின் பேரிலேயே டாடாவிடம் நீரா இணைந்ததாக கூறப்படுகிறது. தனது குழுமத்தின் 90 கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை நீராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷனிடம் ஒப்படைத்தார் டாடா.

2001ல் டாடா குழுமம் பெரும் நிதி சிக்கலை சந்தித்தது. அதை சரி செய்து கொடுத்தவர் நீரா என்கிறார்கள். இதனால் டாடாவிடம் அவருக்கு பெரும் பெயர் கிடைத்தது. இந்த சமயத்தில்தான் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் கூடி வந்தன. இதையடுத்து அரசியல்வாதிகளுடன் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டார் நீரா. இந்த சமயத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும்,டாடா குழுமத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நீரா தலையிட்டார். டாடா குழுமத்தை யாராவது புறக்கணித்தால் அது டாடாவைப் பாதிக்காது, மாறாக, புறக்கணிப்பவர்களுக்கே அது பாதகமாக முடியும் என மீடியா நிறுவனங்களை எச்சரித்தார்.

2004ல் பாஜக ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ராடியா புதிய நண்பர்களைத் தேடத் தொடங்கினார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. ஏ.ராஜாவுடன் அவர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமான மேலும் சிலருடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரத்தன் டாடாமூலமாகத்தான் நீராவின் தொடர்பு ராஜாவுக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது. 2007ம் ஆண்டு ராஜாவை வெகுவாகப் பாராட்டி முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னரே ராஜாவுடன் நீரா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிங்கூர் போராட்டத்தின்போது முகேஷ் அம்பானி டாடா குழுமத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்தார். இதற்குப் பின்னணியில் நீரா இருந்ததாக கூறப்படுகிறது. நீராவின் முயற்சிகளைத் தொடர்ந்தே, டாடாவுக்கு ஆதரவாக முகேஷ் வாய் திறந்தார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதேசமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாக கூறப்படுகிறது.

இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமானநட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரி சை கட்டி காத்துள்ளன. ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே.ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தில் அனுபவமுடைய ஒருவர். மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.

எனவே நீரா ராடியாவுக்கு மிகப் பெரிய மிக நீண்ட சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இதுதொடர்பாக அவர்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடல்களின் சில முக்கிய பகுதிகள் இதோ...

முதல் தொலைபேசிப் பேச்சு-2009, மே 22ம் தேதி காலை 9.48 மணி

ராடியா- ஹாய், தூக்கத்தைக் கலைத்து விட்டேனா?

பர்கா- இல்லை, இல்லை, ஏற்கனவே நான் எழுந்து விட்டேன். இரவு முழுவதும் சரியாகவே தூங்கவில்லை. இன்னும் பிரச்சினை தொடர்கிறதே..

ராடியா- பிரச்சினை என்னவென்றால் அவர்கள் (காங்), அவருடன் (கருணாநிதி) நேரடியாகப் பேச வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதுதான் இப்போது பிரச்சினை.

பர்கா - ஆமாம், அதேசமயம், அவர்கள் (திமுக) வெளிப்படையாக மீடியாக்கள் மூலம் பேசி விட்டதால் பிரதமர் சற்று நெருக்கடியில் உள்ளார்.

ராடியா - ஆனால், பாலுதான் அதை செய்கிறார். இருப்பினும் அப்படிச் செய்யுமாறு கருணாநிதி அவருக்கு உத்தரவிடவில்லை.

பர்கா - அப்படியா ?

ராடியா - ஆமாம் கருணாநிதி அப்படிக் கூறவில்லை. காங்கிரஸிடம் கூறி விட்டு (திமுகவின் நிலையை) வந்து விடுமாறுதான் கருணாநிதி கூறியிருந்தார்.

பர்கா - ஆனால் பாலு எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட்டார்.

ராடியா - ஆமாம், அந்த சமயத்தில் மீடியா ஆட்கள் வெளியில் நின்றிருந்தனர்.

பர்கா - அடக் கடவுளே, இப்போது என்ன செய்யலாம், நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும். அதை சொல்லுங்கள்.

ராடியா - நான் அவரது (கருணாநிதி) மனைவியுடனும், மகளுடனும் இரவு நீண்ட நேரம் பேசினேன். பிரச்சினை என்னவென்றால் காங்கிரஸுக்கு பாலுவைப் பிடிக்கவில்லை. பாலுவைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. கருணாநிதியுடன் அவர்கள் (காங்.) நேரடியாகப் பேச வேண்டும். கருணாநிதியுடன் நேரடியாக அவர்களுக்கு நல்ல உறவு உள்ளது.

பர்கா - சரியாக சொன்னீர்கள்.

ராடியா- ஆனால் பாலு முன்போ அல்லது தயாநிதி மாறன் முன்போ அவர்களால் (காங்கிரஸ் தலைவர்களால்) கருணாநிதியிடம் பேச முடியாது.

பர்கா - ஆமாம்.

ராடியா - எனவே அவர்கள் நேரடியாக பேச வேண்டும். இதற்கு தமிழகத்திலேய நிறைய காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பேசலாம். எனவே நேரடியாக கருணாநிதியிடம் போய் தெளிவாக அவர்கள் பேசி விடலாம். அடுத்த பெரிய பிரச்சினை என்னவென்றால், அழகிரி. பாலுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி தரும்போது, தனக்கு துணை அமைச்சர் பதவி தருவதை அழகிரி விரும்பவில்லை.

பர்கா - சரிதான். ஆனால் பாலுவை நீக்க கருணாநிதி முன்வருவாரா?

ராடியா - பாலுதான் பிரச்சினை என்றால், நிச்சயம் அவரை நீக்க கருணாநிதி முடிவெடுப்பார் என்றே நான் கருதுகிறேன்.

பர்கா - ஆனால் இப்போது பெரிய பிரச்சினை இலாகாக்கள் தொடர்பாகத்தானே?

ராடியா- இல்லை, அவர்கள் இலாகா பற்றி இப்போது சொல்லவில்லை.அதுகுறித்து விவாதிக்கக் கூட இல்லை.

பர்கா- ஆனால் போக்குவரத்து, மின்சாரம், தொலைத் தொடர்பு, தகவல் தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய துறைகளை திமுக கேட்பதாக காங்கிரஸ் கூறுகிறதே..

ராடியா - நான் சொல்வதை தயவு செய்து கவனியுங்கள்.

பர்கா - சரி

ராடியா - கனிக்கு (கனிமொழி) தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தயாநிதி மாறன் கேபினட் அமைச்சராக இருக்கும்போது நீ இணை அமைச்சராக இருப்பது சரியல்ல என்று கனியிடம் அழகிரி கூறி வருகிறார்.

பர்கா - அப்படியா

ராடியா- அதேசமயம், மாறனும், நான்தான் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரே நபர் என்று அனைவரிடமும் (காங்கிரஸ் வட்டாரத்தில்) கூறிக் கொண்டிருக்கிறார்.

பர்கா - அது எனக்குத் தெரியும்.

ராடியா - ஆனால் அது சரி இல்லைதானே?

பர்கா -இல்லை, அதை நான் அறிவேன்.

பர்கா - ஆனால், மாறன் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று கருணாநிதியிடம் காங்கிரஸ் கூற வேண்டியது அவசியம்.

பர்கா - ஓ.கே. அதுகுறித்து மீண்டும் அவர்களுடன் பேசுகிறேன்.

ராடியா - ஆமாம், யார் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன். பாலுவுக்கு ஒரு ஒதுக்கீடு அவசியம். அதுகுறித்து அவர்களிடம் சொல்வது அவசியம். மாறன் பற்றி நாங்கள் எதுவும் இப்போது பேசவில்லை.

--

2வது அழைப்பு - 2009, மே, காலை 10.47

ராடியா - பர்கா, காங்கிரஸ் தரப்பில் நடப்பதை நேற்றே சொன்னேன். காங்கிரஸ் தரப்பிலிருந்து யார் திமுகவுடன் பேசி வருகின்றனர் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

பர்கா - ஆமாம், அனேகமாக மாறனாக இருக்கும்.

ராடியா - ஆனால் கட்டமைப்புத் துறையை மாறனுக்கோ அல்லது பாலுவுக்கோ தர முடியாது என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பர்கா - இல்லை,அதை அவர்களே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

ராடியா- பிரதமரே அதைச் சொல்லியுள்ளார்.திமுகவுக்கு தொழிலாளர் நலத்துறை, உரத்துறை, கெமிக்கல், தொலைத் தொடர்பு மற்றும் ஐடி தருவதாக கூறியுள்ளனர். ராஜாவுக்கு ஐடி, தொலைத் தொடர்பு தருவதாக கூறியுள்ளனர். இதை கருணாநிதிக்கும் தெரிவித்து விட்டனர்.

பர்கா - அப்படியா !

ராடியா - மாறன் உண்மையைப் பேசுவதில்லை என்பதால் நேரடியாக அவர்கள் கூறியிருக்கக் கூடும்.

பர்கா - இல்லை, மாறன் மூலமாகவே இதை அவர்கள் கூறியிருப்பதாக கருதுகிறேன்.

ராடியா - இப்போது அவர்கள் கனியுடன் பேச விரும்புகின்றனர். பின்னர் அவரது தந்தையுடன் பேச விரும்புகின்றனர். ஏனென்றால் பிரதமருடன் கருணாநிதி பேசியபோது கனிதான் மொழி பெயர்த்துக் கூறினார். அது 2 நிமிடமே நடந்த குறுகிய சந்திப்பு.

நீங்கள் கூறுவதை ஆலோசிக்கிறேன்.அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் கூறினாராம்.

பர்கா - அவர்கள் ஆர்சிஆரிலிருந்து (டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை இல்லம், அதாவது பிரதமரின் இல்லம்) அவர்கள் வந்தவுடன் நான் பேசுகிறேன்.

ராடியா - அவர் (கனிமொழி) என்ன நினைக்கிறார் என்றால் யாராவது ஒரு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், தன்னுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார்.

பர்கா- அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் ஆசாத்துடன் பேசுகிறேன். ஆசாத் வெளியில் (பிரதமர் இல்லத்திலிருந்து ) வந்தவுடன் நான் பேசுகிறேன்.

3வது அழைப்பு - மே 22, பிற்பகல் 3.31 மணி

ராடியா - அவருடன் (கனிமொழி) அவர்கள் பேசுகிறார்களா?

பர்கா - ஆமாம். பேசுகிறார்கள்.

ராடியா - யார், குலாமா (குலாம் நபி ஆசாத்)?

பர்கா - குலாம்தான்.

ராடியா - ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர் (கனி) ஐந்து மணி விமானத்தில் ஏறி அவர் சென்னை போகப் போகிறார். ராஜா மட்டுமே பதவியேற்பு விழாவில் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா) பங்கேற்க கட்சி மேலிடம் கூறியுள்ள போதிலும், தயாநிதி மாறனும் கலந்து கொள்கிறார். இதுகுறித்து கருணாநிதியை சந்தித்த அவர், தன்னை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அகமது படேல் குறிப்பிட்டுக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பர்கா - ஆனால் இது உண்மை அல்ல என்று அகமது கூறியுள்ளார்.

ராடியா -ஆனால் கருணாநிதி பெரும் குழப்பத்தில் உள்ளார்.

பர்கா - இல்லை, கனியும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாமே?

ராடியா - இல்லை, தனது தந்தை சொல்லி விட்டதால் பங்கேற்க கனி விரும்பவில்லை. இதனால் திரும்பப் போகிறார். தந்தை சொல்வதைத்தானே அவர் கேட்க முடியும். குலாமிடம் பேசுகிறீர்களா?

பர்கா - இப்போதே அவரிடம் பேசுகிறேன்.

ராடியா - கனி ஐந்து மணிக்குக் கிளம்புகிறார், ஐந்து மணிக்கு அவருக்கு விமானம், மறந்து விட வேண்டாம்.

4வது அழைப்பு-2009, மே 22, மாலை 6.09

பர்கா - காங்கிரஸின் நிபந்தனை என்னவென்றால், பாலுவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறை கூடாது என்பதே. பாலு என்றில்லை, திமுகவுக்கு அந்தத் துறை கிடையாது. சரியா?

ராடியா - சரிதான். ஆனால் பாலு போன்றோர் தனி நபர்கள் அல்லவே. நேற்று வரை 3 பிளஸ் 4 என்று பேசி வந்தனர். ஆனால் பின்னர் மாறனையும் சேர்த்து 4 பிளஸ் 3 என்று பேசினர்.

பர்கா- ஓ.கே.

ராடியா - தற்போது மீண்டும் 3 பிளஸ் 4 என்ற நிலைக்கே மீண்டும் வந்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்து பேசியதுதானே?

பர்கா - இல்லை, அப்படியானால், இது ஏன் முதலிலேயே அவர்களுக்கு சரி என்று படவில்லை?

ராடியா - அழகிரியால்தான். அழகிரியை அமைச்சராக்குவதாக இருந்தால் அவருக்கு கேபினட் கிடைக்காது. (பர்கா குறுக்கிட்டு அப்படியா என்கிறார்), ஆமாம், அவருக்கு கேபினட் கிடையாது.

பர்கா - அப்படியானால் அழகிரிக்கு என்ன தரப் போகிறார்கள்?

ராடியா - அவருக்கு சுகாதாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதுவும் கூட கேபினட் பொறுப்பு அல்ல. மாறன் கிடையாது, ராஜா கிடையாது, பாலுவும் கிடையாது.

பர்கா - அழகிரிக்கு சுகாதாரத் துறை கொடுத்ததே காங்கிரஸ் செய்த மிகப் பெரிய தியாகம்தான். காரணம், திமுகவுக்கு சுகாதாரத் துறை கிடையாது என்று முதலில் காங்கிரஸ் கூறி வந்தது. இப்போது அவர்கள் விட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால் அழகிரிக்கு சுகாதாரத் துறை, கேபினட் பொறுப்பு தர முடியாதா என்ன?

ராடியா - ஒத்துக் கொள்கிறேன். அப்படியானால் ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவியே கிடைக்கும். அதேபோல பாலுவுக்கும் இணை அமைச்சர் பதவி தானா?

பர்கா - இல்லை இல்லை. பாலுவுக்கு கனரக துறை கிடைக்கலாம். அப்படிக் கிடைத்தால் அழகிரிக்கு உரத்துறை கிடைக்கும். ஒருவேளை பாலுவுக்கு உரத்துறை கிடைத்தால், அழகிரிக்கு இந்த சுகாதாரத் துறை கிடைக்கும்.

ராடியா - மாறனுக்கு தொலைத் தொடர்பு ஐடி துறை.

பர்கா - ஆமாம். ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவி.

ராடியா - யாருக்கு?

பர்கா - ராஜாவுக்கு, இல்லையா?

ராடியா - இல்லை இல்லை, அப்படி இல்லை, என்னை நம்புங்கள்

4வது அழைப்பு - 2009, மே 22, இரவு 7.23

பர்கா - பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தரப்பில் அனைவரும் பங்கேற்க போய்விட்டனர். எனவே உயர் மட்டத் தலைவர்களுடன் என்னால் பேச முடியவில்லை. இப்போதுதான் திரும்பி வந்துள்ளேன். இனிமேல்தான் தொடர்ச்சியாக பேசப் போகிறேன்.

ராடியா- கனி இப்போதுதான் சென்னைக்குப் போயுள்ளார். இப்போதுதான் அவரிடம் பேசினேன்.

பர்கா - தயாநிதி மாறன் எங்கே?

ராடியா - பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. அவரை கட்சி மேலிடம் அழைத்து விட்டது. அகமது படேல் என்னை பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அவர் கருணாநிதியிடம் சொன்னபோது, அப்படியானால் நீ காங்கிரஸிலேயே சேர்ந்த விடு என்று கருணாநிதி கூறி விட்டார். இதனால் அவர் பங்கேற்கவில்லை.

ராஜாவை மட்டுமே பங்கேற்குமாறு கட்சி மேலிடம் கூறியதால் அவர் மட்டும் பங்கேற்றார். அவரும் கூட 8.40 மணிக்கு விமானம் ஏறுகிறார்.

இவ்வாறு போகிறது தொலைபேசி உரையாடல்.

Thursday, October 14, 2010

meiyyan

மூக்கறுப்புப் போர்

மூக்கறுப்புப் போர்
மனித ஜாதியில் ஆணோ, பெண்ணோ முக அழகு மூக்காலேதான். அழகி கிளியோபாட்ராவின் மூக்கழகு சரித்திர பிரசித்தி. அவளுடைய மூக்கழகுக்கு முதலில் மயங்கியவன் சீசர். அடுத்து அந்தோனி. யோசித்துப் பார்த்தால் மூக்கறுத்த கதைதான் இராமாயணம். ஆண்களில் கும்பகர்ணன் மூக்கிழந்தான். பெண்களில் சூர்ப்பனகை . இவர்கள் நிசமாகவே மூக்கிழந்தவர்கள். சீதையைத் தூக்கிக்கொண்டுபோக வந்தாள் சூர்ப்பனகை. பெண் கொலை கூடாது என்பதால் இவளைக் தண்டித்து விரட்ட நினைத்தான் இலக்குவன். பெண்ணுக்கு அழகு தரும் உறுப்புக்களை அறுத்தெரிந்தான். முதலில் அறுபட்டது இவளுடைய மூக்கு.

போனால் வராதவை உயிரும் மானமும். ஆகவே கொல்வதற்குப் பதிலாக ஒருவனை அவமானப்படுத்தி அனுப்புவது ஒருவகை அரச தண்டனை தமிழர் மூக்கைக் கன்னட் நாட்டினர் அறுத்தனர் மதுரையில்.திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் .இச் செய்தி இங்கு விவரிக்கப்படுகிறது

1658ம் ஆண்டு மைசூர் மன்னர் முதலாம் கண்டீர நரசன் இதே தண்டனை முறையை மிகக்கொடூரமாக நடத்தினான் அதன் பலனை அவனே பின்னர் அனுபவித்தான்.

இவ்வரசனுக்கும் திருமலை நாயக்கருக்கும் விரோதம். திருமலை நாயக்கர் நோய் வாய்ப்பட்டு த படுக்கையில் இருந்த சமய்ம். கன்னட கண்டீர நரசன் உத்திரவுப்படி சேனாதிபதி தளவாய் ஹம்பய்யா மதுரைமீது படையெடுத்தான். கன்னட வீரர்கள் கையில் ஒருவகையான இரும்புக் கருவிகள் . மேல் உதட்டோடு மூக்கை அறுத்தெரிய உதவும் அவை. அறுத்தெரிந்த மூக்குகளை அள்ளிக்கொண்டு போய் கன்னட அரசினிடம் குவிப்பார்களாம் அவ்வீரர்கள். மீசையுடன் வந்த மேல் உதட்டு மூக்குகளுக்குச் சிறப்பான சன்மானமாம்.

சத்திய மங்கலத்திலும், மதுரை வரும் வழியிலும், மதுரையிலும் எண்ணற்ற ஆண் பெண் அப்பாவி சிசுக்களின் மூக்குகளை கன்னடிய வீரர்கள் அறுத்து எரிந்தார்களாம்.

இக்கட்டான இச்சூழ்நிலையில் அந்நாளில் மிக வலிமையுடன் இருந்த மன்னர் இராமநாதபுர திருமலை ரகுநாத சேதுபதி [ 1646 - 1676 ] அவரை அணுகுவதைத்தவிர வேறு வழியில்லை என உணர்ந்தார் திருமலை நாயக்கர்.

சேதுபதி 25 ஆயிரம் மறவர்களுடன் மதுரைக்கு விரைந்தார். நாயக்கர் படைகளுக்குத் தலைமையேற்றுக் கன்னடப்படைகளை அம்மைய நாயக்கனூரை அடுத்த பரந்த வெளியில் கன்னடியரின் பிரம்மாண்டமான படை அணிகளைத்தாக்கி அவர்களை முறியடித்து விரட்டியதோடு பின் தொடர்ந்து சென்று அவர்கள் கடைப்பித்த அதே மூக்கறுப்பு வேலையை மைசூரில் நம் மறவர்கள் செய்தார்களாம். மைசூர் மன்னன் கண்டீர நரசனைச் சிறைப்படுத்தி அவனுடைய மூக்கையும் மேல் உதட்டோடு அறுத்து பழிதீர்த்துக் கொண்டார்களாம்.

இச்செய்தியை அறிந்த நாயக்கர் மன்னன் மதுரைக்கோட்டை வாயிலில் சேதுபதி மன்னருக்குச் சிறப்பான வரவேற்பினை வழங்கிப் பரிசுப் பொருட்களையும் அளித்துப் பாராட்டினார். மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள
திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய தனது பகுதிகளை வெகுமதியாக வழங்கிச் சிறப்பித்தார்.
கன்னடியர் மூக்கறுப்பு வெற்றியின் நினைவாக மதுரைத் தமுக்கம் மைதானம் அருகே கல்மண்டபம் நாயக்கரால் கட்டப்பட்டது. வைகையாற்றில் அழகர் இறங்கிப் பின் திரும்பும் போது இம்மண்டபத்தில் அழகர் எழுந்தருளுவார். திருமலை ரகு நாதசேதுபதி திருப்பெயரை பறைசாற்றும் இவ்வுற்சவம் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

.

தகவல் நூல்கள்: சர்வோதயம் இதழ் ஆகஸ்ட் 2005
சேதுபதி மன்னர் வரலாறு முனைவர் எஸ் எம் கமால்
சிவகங்கைச் சீமை சுவாமி துர்காதாஸ் 1965

Thursday, August 19, 2010

பெரிய மருது வேலு நாச்சியார் உறவு நிலை

அன்பார்ந்த இரா.முருகன் சிவகங்கை வரலாறுச்சற்றே சறுக்கலான வரலாறு கும்பெனி ஆவணங்கள் பின்நாள் எழுந்த வாரிசு உரிமைக் கோரிக்கை கோர்ட் வரை சென்று கோர்ட் அளித்த தீர்ப்புக்கள் இவற்றைச் சுற்றிச் சுழலும் ஒரு வரலாறு செவி வழிச் செய்திகள் ஏராளம் அச்செய்திகள் புனைவுகளாகக் கூட இருக்கலாம் செவிவழிச் செய்தி சொல்பவர் அதைக் கேட்டு நம்புவோர் இவர்களின் மனப்பக்குவங்களைப் பொறுத்தது அச்செய்திகள் அமைவதால் மட்டுமே வரலாற்றில் திடமான இடத்தைப் பிடிக்க இயலாது அத்தகையகச் செவி வழிச் செய்திதான் பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் உறவு நிலை. பிரதானியான பெரிய மருது நாச்சியாரின் படுக்கை அறைவரை வர அநுமதிக்கப்படுகிறார் எனும் செய்தி விஷமத்தனமான வேண்டுமென்றே ஏதோ ஓர் அரசியல் காரணத்திற்காக கிளப்பிவிடப்பட்ட வதந்தியென்றே தோன்றுகிறது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான கும்பெனியார் ஏன் இதனைக் கிளப்பிவிடுவதன் மூலம் இரு ஜாதிகளிடையே சிண்டு மூட்டி மருதிருவரையும் அவர் சார்ந்த ஜாதியையும் தனிமைப்படுத்தித் தங்கள் ஆதிக்கத்தை சிவகங்கையில் நிலை நாட்டியிருக்கமுடியாது? பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த கும்பினியார் முந்தானை விரித்தாளும் போக்கிற்கு வித்திட்டிருக்கலாமே

Wednesday, August 18, 2010

வணக்கம் முருகன் தமிழில் சிறந்த சிறு கதை எழுத்தாளர் இம்மண்ணின் மைந்தர் என்வே அக்கறை காட்டுகிறீர்கள் நன்றி. தாண்டவராயர் 1773ல் மண்ணைவிட்டு மறைகிறார் பின்னரே மருதிருவர் பிரதானிகளாக ஆற்காட்டு நவாபாலும் கும்பெனியாலும் அங்கீகரிக்கப்படுகின்றனர் தாண்டவராயர் காலத்தில் மருது சகோதரர்கள் எவ்வாறு எந்த ஹோதாவில் சிவகங்கையில் செயல்பட்டனர் என்பதற்கு ஆதாரம் கொடுக்க ஆவணங்கள் இல்லை. யூசுப் கான் சிவகங்கைக் கோட்டையை முற்றுகையிட்டார் பின் ஒரு நாளில் கும்பெனியாரால் தூக்கு மேடையேறினார் அவரைக் காட்டிக் கொடுத்தவர்களுள் தாண்டவராய பிள்ளையும் ஒருவர் என்ற செய்தி வியப்பளிக்கவல்லது. பெரிய மருது வேலு நாச்சியார் மண உறவு செவி வழிச் செய்திகள் ஏளாரம். அவற்றைக் கொச்சைப்படுத்தி வரலாறாக்காமல் புதினங்கள் புனையலாம் கோ வி மணி சேரன் போன்று செளமிய ஆண்டு தைத்திங்கள் 13ம் நாள் உடன்படிக்கை மூலம் ராம்நாடு சீமையிலிருந்து பிரிந்து சின்ன மறவர் சீமையை ஆள முழுத்தகுதி பெற்ற நாலுகோட்டை வம்சம் சக்கந்தி வேங்கம் பெரிய உடையணத்தேவர் கும்பெனியால் நாடு கடத்தப்பட்டதோடு முடிய அவர்களுக்குத் தாயாதிக்காரர்களான படமாத்தூர் கெளரி வல்லவர் தன் அண்ணன் மக்களுடன் கும்பெனியாரால் அமைக்கப்பட்ட கீழ் மேல் கோர்ட்டுக்களில் தாவாப் பண்ணிக்கொண்டு 1829ல் காலமானார். அதற்குப்பிறகு எழுந்த வரலாறு வாரிசுரிமைச் சண்டைகளின் வரலாறு வக்கீல்களுக்கு மட்டுமே புரியம் வாதப்ரிதிவாதங்கள். அவற்றின் ஒட்டு மொத்த வரலாறு k.Annaasamy அய்யர் எழுதிய Sivanganga Zemindary Its Origin and Litigation 1730 - 1899ல் படித்துப் பார்க்கலாம், பக்கத்தில் ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொண்டு

Sunday, August 8, 2010

சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளை

தாண்டவராய பிள்ளை
.


தாண்டவராய பிள்ளை
தாண்டவராய பிள்ளை (கிபி 1700 - 1773) சிவகங்கைச் சீமையின்பிரதானியாகவும், தளவாயாகவும் பணியாற்றியவர்.கட்டபொம்மனுக்கு சுப்பிரமணிய பிள்ளை, முத்துராமலிங்க சேதுபதிக்கு தாமோதரன் பிள்ளை பிரதானிகளாக அமைந்தது போல, சிவகங்கைச் சீமையை ஆண்ட சசிவர்ணத் தேவர் (1730–1750), முத்துவடுகநாதத் தேவர் (1750-1772), ராணி வேலு நாச்சியார்(1772-73) ஆகியோருக்கு அமைந்தவர் தாண்டவராய பிள்ளை.

தோற்றம்
சிவகங்கை இராச்சியத்தில் திருக்கோட்டியூருக்கு அருகில் அரளிக்கோட்டை(முல்லையூர்) எனும் கிராமத்தில் காத்தவராய பிள்ளை என்பாருக்கு மகனாக இவர்1700ம் ஆண்டில் பிறந்தார். அவர் தமது சமுதாயத்திற்கென்றே உரிய பண்பான கல்வி ஆற்றல் விவேகம் ஒருங்கே அமைந்தவராய் உருவானார்.
பிரதானிப் பணி
மதுரை மன்னருக்கான போட்டியில் பங்காரு திருமலை நாயக்கரை எதிர்த்த ஆற்காட்டு நவாபு சந்தா சாகிபு, பங்காரு திருமலையையும் அவர்தம் மகன்விஜயகுமார் நாயக்கரையும் அம்மைய நாயக்கனூர் போரில் தோற்கடித்த பின்னர் நாயக்கர்களுக்கு சசிவர்ணத்தேவரின் வீரமும் தாண்டவராய பிள்ளையின் விவேகமும் பெரு துணையாக நின்று சிவகங்கை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சிக் கோட்டையில் இரு நாயக்கர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உதவிற்று[1].
மதுரைமீது படையெடுப்பு
சசிவர்ணர் 1750 இல் காலமானார். அவரது மகன் முத்து வடுக நாதர் மன்னரானார்.1752 இல் ராமனாதபுரச் சேதுபதியும் முத்து வடுக நாதரும் விஜய குமார் திருமலை நாயக்கரை மதுரை மன்னாராக்கினர். மைசூர் தளபதி மாயனா விஜயகுமாரை மன்னர் பதவியிலிருந்து விரட்டியடித்தார். ராம நாதபுரம் தளபதி வெள்ளையன் சேர்வைகாரரும் சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளையும் மதுரை மீது படையெடுத்து மாயனாவைத் தோற்கடித்தனர்[2].
தாமரைப் பட்டயம் வழங்கல்
சிவகங்கை சமஸ்தானத்தை உருவாக்கி மன்னர் சசிவர்ணத் தேவரின் மனதில் நீங்காத நிறைவான இடத்தைப் பெற்றப் பிள்ளையைப் பாராட்டி மன்னரது மகன் முத்து வடுக நாதர் அவருக்கு ஒரு தாமரைப் பட்டயம் வழங்கி பிள்ளையைப் பெருமைப் படுத்தியுள்ளார்.

காளையார் கோவில் போர்
1772ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் நாள் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைத் தளபதி பான்ஜோர் தலைமையில் வந்த படைகளும் ஆற்காட்டு நவாபின் படைகளும் இணைந்து தொடுத்த காளையார் கோவில் போரில் பிள்ளை விடுத்த எச்சரிக்கையையும் மீறி மன்னர் முத்து வடுக நாதர் பீரங்கி குண்டடிபட்டு வீர மரணமடைந்தார்[3].
ராணியும் பிள்ளையும்
முத்து வடுக நாதர் தம் மனைவி ராணி வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சி நாச்சியார் தாண்டவராய பிள்ளை மற்றும் மருது இருவர் உதவியுடன் திண்டுக்கல்அருகே உள்ள விருப்பாச்சிக்கு விரைந்தனர். சிவகங்கையில் நவாபின் ஆட்சி ஏற்பட்டது. ராணி வேலு நாச்சியாரை மீண்டும் சிவகங்கை அரியணையில் ஏற்ற பிள்ளை திண்டுக்கலிருந்த ஹைதர் அலியின் உதவியை நாடினார். படை உதவி கேட்ட ஆறு மாதங்களுக்குள் 1773ல் பிள்ளை அவர்கள் காலமானார்[4].
பிள்ளையின் கோவில் திருப்பணிகள்
சைவப் பெருங்குடியில் உதித்த இயற்கை இறை நேசர் தாண்டவராய பிள்ளைகுன்றக்குடி முருகன் கோவிலைப் புதுப்பித்தார். அங்கு வையாபுரி தடாகம் நந்தவனம் வேத பாடசாலை அமைத்தார். திருப்புத்தூரில் வைரவ நாத சுவாமி கோயிலுக்கும் திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலுக்கும் ஏராளமான திருப்பணிகளைச் செய்தார். பிள்ளையின் சிறப்புக்கள் அருங்குணங்கள் அருட்கொடைகள் தெய்வத் திருப்பணிகள் ஆகியவற்றை மிதுலைப் பட்டி எனும் ஊரில் வாழ்ந்த குழந்தைக் கவிராயர் எனும் புலவர் இயற்றிய மான் விடு தூது எனும் நூல் சிறப்பாக விவரிக்கிறது. இந்நூலை தமிழ்த் தாத்தா ஊ வே சா அவர்கள் பதிப்பித்து அதற்குச் சிறப்புரை எழுதியுள்ளார்.
குறிப்புகள்
1. ↑ The Indian Antiquary vol YL VI- Bombay-page 239
2. ↑ The History of Madurai by Dr.K.Rajayyan
3. ↑ The History of Madurai by Dr.K.Rajayyan
4. ↑ The History of Madurai by Dr.K.Rajayyan

மருது பாண்டியர் கூட்டமைப்பு

.மருதுபாண்டியர் கூட்டமைப்பு என்பது சின்ன மருது தலைமையில் ஆங்கிலேயருக்குஎதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய போராளிகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.
வரலாறு
வணிக நோக்கோடு தென்னிந்தியாவில் காலூன்றிய பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியார் தென்னிந்தியாவில் பாளயக்காரர்களுக்கு இடையே பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கையாண்டனர்.
முதல் பலிக்காடாவாக ஆனவர் ஆற்காடு நவாப். நவாபுக்கு இதுகாறும் கப்பம் செலுத்திவந்த தமிழக பாளையப்பட்டுக்கள் ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சுரண்டலுக்கு இரையாகின. பிரித்தானிய எதிர்ப்பு, ஓர் இயக்கமாக இல்லாவிடிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேர் விட்டுக்கொண்டிருந்த நேரம்.
1799 ஆம் ஆண்டு பிரித்தானியர் எதிர்ப்புப் புரட்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.திருநெல்வேலியும் மைசூரும் அன்னிய ஆதிக்கத்திற்கு இரையாயின. ஆங்கிலேயர்கள் பெற்ற இவ்வெற்றி தேசியப் போராட்டத்திற்கு மரண அடியாக அமையவில்லை. பிரித்தானிய எதிர்ப்பு அமைப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்தது. தென்னிந்தியாவின் வட பகுதியில் திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணம் எய்திய செய்தியும், கட்டபொம்மனுடைய வீர மரணமும் ஒருங்கிணைந்த தேசிய உணர்ச்சியைத் தென்னிந்தியா முழுமையும் பரவக் காரணமாக அமைந்தன.
கூட்டமைப்பு
பாஞ்சாலங்குறிச்சியின் அழிவுக்குப்பின்னால் பிரித்தானிய எதிர்ப்புப் போராளிகள் ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனைகளுக்கு அஞ்சி சிவகங்கைச்சீமையின்அடர்ந்தக் காட்டுப் பகுதியான காளையார்கோவில் காடுகளில் தஞ்சமடைந்ததுடன் அங்கு ஏற்கனவே இருந்த புரட்சிக் கூட்டமைப்போடு இணைந்து கொண்டனர். மைசூரின் வீழ்ச்சியை அடுத்து மேற்குப் பகுதியிலிருந்த போராளிகளும் இப்பாதுகாப்பான காளையார் கோவில் காட்டுப் பகுதிக்கே வந்து தஞ்சமடைந்தனர்.
காளையார்கோவில் காட்டுப் பகுதியானது மானாமதுரை, சாக்கோட்டை, சிங்கம்புணரிஆகிய இடங்கள் வரையில் சுமார் 50 மைல் சுற்றளவுக்குப் பரவியிருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதி இது. தற்போது பேசப்படும் கெரில்லாப் போர் தந்திரங்களுக்குத் தகுதியான வனப்பகுதி. இதனிடையே கிராமங்களோ, விவசாய நிலங்களோ இல்லை. இங்குள்ள மரங்கள் எல்லாம் வலுவானவை, தரையோடு படர்ந்துள்ள மரங்களும் அதிகம். மருதிருவரின் படைவீரர்களால் காக்கப்பட்டு மாற்றார் அணுகா வண்ணம் அமைந்திட்ட இப்பகுதி மைசூர் திருநெல்வேலி வீழ்ச்சிக்குப் பின்னால் போராளிக் குழுக்களின் நடவடிக்கைக்கு மையமாக அமைந்தது.
பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் ஓர் இயற்கை இயக்கமாக உருமாற்றம் அடையக் காரண கர்த்தா சின்ன மருதுபாண்டியர் ஆவார். மருதுபாண்டியரின் அருகாமை, போராளிக் குழுக்களுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இயக்க எதிர்ப்பானது உன்னதமான உயிர்த் தியாகங்களுக்கு தயாராக இருந்த வீரர் படையைப் பெற்றிருக்கமுடியாது.
சின்ன மருதுபாண்டியர் ஆங்க்கிலேயரின் பலவீனத்தை நன்கு அறிந்த ராஜ தந்திரியாவார். ஒரு பாளையத்திற்குமேல் இரண்டு பாளையங்கள் சரியானபடி முழுமூச்சாக எதிர்த்தாற்கூட ஆங்கிலேயர் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். இதை உணர்ந்துதான் சின்ன மருது கூட்டமைப்பைக் கூட்டத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேயர் தம் நோக்கம் நிறைவேறப் பாளையங்களை ஒன்று சேரவிடாமல் அவர்களுக்குள் சிண்டு முடிந்தனர்.
வெல்லற்கரிய அவ்வீரர் அடுத்துச் செய்தது, போராளிக் குழுமங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளச் செய்த்தாகும். கிராமங்களின் நாட்டாமைகளுக்கும் பாளையங்களின் தலைவர்களுக்கும் தூதுவர்களை அனுப்பி புரட்சி இயக்கச் செய்தியைக் கொண்டு செல்லவைத்தார். அக்கூட்டமைப்புக்கள் மிகத்திறமையான தலைவர்களின் கீழ் திரைமறைவில் இரகசியமாக இயங்கத்தொடங்கின.
தென்னகத்தின் விடுதலைப் போராளிகளின் கழகங்கள் அல்லது கூட்டமைப்புக்கள் எவ்வாறு ஒரு கட்டுக்கோப்புக்குள், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறந்த தலைமையின் கீழ் இயங்கின என்பதைக் காட்டும்.
 தஞ்சைப்பகுதி:- ஞானமுத்து
 இராமநாதபுரம் பகுதி :- மயிலப்பன், சிங்கம் செட்டி,முத்துகருப்பர்
 மதுரை மற்றும் சிவகங்கைப் பகுதி :- மருதிருவர்
 திண்டுக்கல் மற்றும் திருச்சிப் பகுதி :- விருப்பாட்சி கோபால நாயக்கர்
 கோவை மற்றும் சேலம் பகுதி :- கானிஜா கான்
 வட கேரளம் ( மலபார் ):- கேரள வர்மன் ( பழசி ராஜா )
 மேற்கு மைசூர் :- கிருஷ்ணப்ப நாயக்கர்
 வட கன்னடம் மற்றும் அதன் வடபாலுள்ள பகுதிகள் :- தூண்டாஜி வாக்
இவற்றில் இராமநாதப் போராளிகள், தஞ்சைப் போராளிகள், சிவகிரிப் பாளையக்காரரின் மைந்தன் மாப்பிள்ளை வன்னியன் தலைமையிலான மேற்கு நெல்லைப் போராளிகளின் கூட்டுக் குழுக்கள் சின்ன மருதுவின் தலைமையை ஏற்றன. கிழக்கு நெல்லைப் போராளிகளின் கழகத் தலைவரான கட்டபொம்மனுக்கு உந்து சக்தியாக விளங்கியவரே சின்ன மருதுதான்.
 South Indian Rebellion by Dr.K.Rajayyan (1971), பக்கங்கள்: 66, 67, 70, 79, 82, 83, 86, 89, 94, 138, 141, 266, 269, 271
 A History of Freedom Struggle in India by Dr.K.Rajayyan, பக். 45
.

மருது பாண்டியர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி

மருதிருவர் பெற்ற சாபம்
சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் சிவகங்கை அருகே உள்ள ஒர் சிற்றூர் காளையார்கோவில். பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும். பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.


மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர். மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார். அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர். அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார். அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது

Saturday, August 7, 2010

மருதுபாண்டியர்களுக்குப் பின் நாட்களில்

அய்யன்மீர் வணக்கம் 18ம் நூற்றாண்டில் வெள்ளையனை எதிர்த்து முதல் குரல் எழுப்பி உள்நாட்டுச் சதிகாரர்களின் சதிச்செயல்களால் தூக்கு மேடையைத் தழுவினரே சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த மருதிருவர் அவர்களது வரலாறு நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள்..... 24-10-1801ல் அவ்விருவரும் தூக்கிலப்பட்ட பின்னர் சிவகங்கைச் சீமையில் நடந்த விவரங்களை அறிவீரா 2010 ஆகஸ்ட் காலச்சுவடு சிற்றிலக்கிய இதழில் மருதிருவர் தொடர்பான கட்டுரை ஒன்றைப் படித்தேன். நீங்களும் படியுங்களேன் காலச்சுவடு இதழின் URL www.kalachuvadu.com