Tuesday, November 30, 2010

நிரா ராடியா டேப் உரையாடல்கள்

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
இந்திய அரசியலைக் கலக்கும் நீரா ராடியாவும், அரசியல் தொடர்புகளும்
திங்கள்கிழமை, நவம்பர் 29, 2010, 16:13[IST] A A A Follow us on

Free Newsletter Sign up
Vote this article (3) (0)
Ads by Google
Samsung Smartphones www.in.SamsungMobile.com/SmartPhone
Introducing range of Smartphones to Choose. Official Website. Visit Now
டெல்லி: இந்திய அரசியலைக் கலக்கி வரும் நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர்களோ, பிசினஸ் தலைவர்களோ இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் நீரா ராடியா

முன்பு இவரது பெயர் நீரா சர்மா. இவரது தந்தை விமானத் துறையில் இருந்தவர். இவரது கணவர் பெயர் ஜனக் ராடியா. இவரை விவாகரத்து செய்து விட்டார். இவர் மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். ஜனக் ராடியா இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவர்.

லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.

1995ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

2000மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிஅதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார்.

2001ல்தான் தற்போது நடத்தி வரும் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லாததால்.

டாடா நானோ பிரச்சினை சிங்கூரில் வெடித்து வெளிக் கிளம்பியபோது அதைத் தணிக்கும் முயற்சியில் பல மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெறும் பிஆர் அதிகாரியாக இருந்து வரும் நீராவின் தொடர்புகளைப் பார்த்தால் மலைக்க வைக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் கூட நீராவின் பேச்சு புகுந்திருப்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு பல்வேறு பிரமுகர்களுடனும் வெகு சரளமான தொடர்பைப் பராமரித்து வந்துள்ளார் நீரா.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.

உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. ஆனால் இது அத்தோடு நிற்காது போலத் தெரிகிறது. ராடியா பல்வேறு பிரமுகர்களுடன் பேசியதொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது.

50 வயதுகளில் இருக்கும் நீரா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவரது தந்தை சர்மா கென்யாவில் வசித்து வந்தார். 70களில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். லண்டனில் இருக்கும்போதுதான் குஜராத்தைச் சேர்நத் ஜனக் ராடியாவை மணந்து கொண்டார் நீரா. பின்னர் அவர் மூலம் மூன்று மகன்கள் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். நீராவின் மகன்களில் ஒருவரான கரண், கடந்த 2003ம் ஆண்டு இந்தியா மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டவர் ஆவார். அப்போது நீராவின் பிசினஸ் பார்ட்னரான தீரஜ் சிங் என்பவரால் கரண் கடத்தப்பட்டார். தீரஜ் சிங், மறைந்த ஹரியானா முதல்வர் ராம் பிரேந்தர் சிங்கின் பேரன் ஆவார். அன்று முதலே மீடியா வெளிச்சத்தில் விழுந்தார் நீரா.

2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவேஅறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.

அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும்நீராவின்நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.

ஆனந்த்குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தனியாக ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்க கடுமையாக முயற்சித்தார் நீரா. ஆனால் அவருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனந்த்குமாருடன் நெருக்கமாக இருந்தபோதும் அது முடியாமல் போனது. இதேசமயத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை தொடங்க கடுமையாக முயன்றார் ரத்தன் டாடா. அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு காரணம் ஒரு தனி நபர்தான் என்று சமீபத்தில் ரத்தன் குற்றம் சாட்டியிருந்தார். அது வேறு யாரும் அல்ல ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல்தான். டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டம் அனுமதி பெறாமல் நரேஷ் கோயல் தடுத்ததாக அப்போதே பலத்த குற்றச்சாட்டு இருந்தது. நரேஷ் கோயலின் வேலையால் நீராவும் பாதிக்கப்பட்டார்.

அதன் பின்னர்தான் டாடாவுடன் நெருங்கினார் நீரா. டாடா குழும மக்கள் தொடர்புப் பணிகள் நீராவிடம் சென்றன. நுஸ்லி வாடியாவின் சிபாரிசின் பேரிலேயே டாடாவிடம் நீரா இணைந்ததாக கூறப்படுகிறது. தனது குழுமத்தின் 90 கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை நீராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷனிடம் ஒப்படைத்தார் டாடா.

2001ல் டாடா குழுமம் பெரும் நிதி சிக்கலை சந்தித்தது. அதை சரி செய்து கொடுத்தவர் நீரா என்கிறார்கள். இதனால் டாடாவிடம் அவருக்கு பெரும் பெயர் கிடைத்தது. இந்த சமயத்தில்தான் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் கூடி வந்தன. இதையடுத்து அரசியல்வாதிகளுடன் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டார் நீரா. இந்த சமயத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும்,டாடா குழுமத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நீரா தலையிட்டார். டாடா குழுமத்தை யாராவது புறக்கணித்தால் அது டாடாவைப் பாதிக்காது, மாறாக, புறக்கணிப்பவர்களுக்கே அது பாதகமாக முடியும் என மீடியா நிறுவனங்களை எச்சரித்தார்.

2004ல் பாஜக ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ராடியா புதிய நண்பர்களைத் தேடத் தொடங்கினார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. ஏ.ராஜாவுடன் அவர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமான மேலும் சிலருடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரத்தன் டாடாமூலமாகத்தான் நீராவின் தொடர்பு ராஜாவுக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது. 2007ம் ஆண்டு ராஜாவை வெகுவாகப் பாராட்டி முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னரே ராஜாவுடன் நீரா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிங்கூர் போராட்டத்தின்போது முகேஷ் அம்பானி டாடா குழுமத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்தார். இதற்குப் பின்னணியில் நீரா இருந்ததாக கூறப்படுகிறது. நீராவின் முயற்சிகளைத் தொடர்ந்தே, டாடாவுக்கு ஆதரவாக முகேஷ் வாய் திறந்தார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதேசமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாக கூறப்படுகிறது.

இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமானநட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரி சை கட்டி காத்துள்ளன. ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே.ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தில் அனுபவமுடைய ஒருவர். மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.

எனவே நீரா ராடியாவுக்கு மிகப் பெரிய மிக நீண்ட சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இதுதொடர்பாக அவர்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடல்களின் சில முக்கிய பகுதிகள் இதோ...

முதல் தொலைபேசிப் பேச்சு-2009, மே 22ம் தேதி காலை 9.48 மணி

ராடியா- ஹாய், தூக்கத்தைக் கலைத்து விட்டேனா?

பர்கா- இல்லை, இல்லை, ஏற்கனவே நான் எழுந்து விட்டேன். இரவு முழுவதும் சரியாகவே தூங்கவில்லை. இன்னும் பிரச்சினை தொடர்கிறதே..

ராடியா- பிரச்சினை என்னவென்றால் அவர்கள் (காங்), அவருடன் (கருணாநிதி) நேரடியாகப் பேச வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதுதான் இப்போது பிரச்சினை.

பர்கா - ஆமாம், அதேசமயம், அவர்கள் (திமுக) வெளிப்படையாக மீடியாக்கள் மூலம் பேசி விட்டதால் பிரதமர் சற்று நெருக்கடியில் உள்ளார்.

ராடியா - ஆனால், பாலுதான் அதை செய்கிறார். இருப்பினும் அப்படிச் செய்யுமாறு கருணாநிதி அவருக்கு உத்தரவிடவில்லை.

பர்கா - அப்படியா ?

ராடியா - ஆமாம் கருணாநிதி அப்படிக் கூறவில்லை. காங்கிரஸிடம் கூறி விட்டு (திமுகவின் நிலையை) வந்து விடுமாறுதான் கருணாநிதி கூறியிருந்தார்.

பர்கா - ஆனால் பாலு எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட்டார்.

ராடியா - ஆமாம், அந்த சமயத்தில் மீடியா ஆட்கள் வெளியில் நின்றிருந்தனர்.

பர்கா - அடக் கடவுளே, இப்போது என்ன செய்யலாம், நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும். அதை சொல்லுங்கள்.

ராடியா - நான் அவரது (கருணாநிதி) மனைவியுடனும், மகளுடனும் இரவு நீண்ட நேரம் பேசினேன். பிரச்சினை என்னவென்றால் காங்கிரஸுக்கு பாலுவைப் பிடிக்கவில்லை. பாலுவைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. கருணாநிதியுடன் அவர்கள் (காங்.) நேரடியாகப் பேச வேண்டும். கருணாநிதியுடன் நேரடியாக அவர்களுக்கு நல்ல உறவு உள்ளது.

பர்கா - சரியாக சொன்னீர்கள்.

ராடியா- ஆனால் பாலு முன்போ அல்லது தயாநிதி மாறன் முன்போ அவர்களால் (காங்கிரஸ் தலைவர்களால்) கருணாநிதியிடம் பேச முடியாது.

பர்கா - ஆமாம்.

ராடியா - எனவே அவர்கள் நேரடியாக பேச வேண்டும். இதற்கு தமிழகத்திலேய நிறைய காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பேசலாம். எனவே நேரடியாக கருணாநிதியிடம் போய் தெளிவாக அவர்கள் பேசி விடலாம். அடுத்த பெரிய பிரச்சினை என்னவென்றால், அழகிரி. பாலுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி தரும்போது, தனக்கு துணை அமைச்சர் பதவி தருவதை அழகிரி விரும்பவில்லை.

பர்கா - சரிதான். ஆனால் பாலுவை நீக்க கருணாநிதி முன்வருவாரா?

ராடியா - பாலுதான் பிரச்சினை என்றால், நிச்சயம் அவரை நீக்க கருணாநிதி முடிவெடுப்பார் என்றே நான் கருதுகிறேன்.

பர்கா - ஆனால் இப்போது பெரிய பிரச்சினை இலாகாக்கள் தொடர்பாகத்தானே?

ராடியா- இல்லை, அவர்கள் இலாகா பற்றி இப்போது சொல்லவில்லை.அதுகுறித்து விவாதிக்கக் கூட இல்லை.

பர்கா- ஆனால் போக்குவரத்து, மின்சாரம், தொலைத் தொடர்பு, தகவல் தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய துறைகளை திமுக கேட்பதாக காங்கிரஸ் கூறுகிறதே..

ராடியா - நான் சொல்வதை தயவு செய்து கவனியுங்கள்.

பர்கா - சரி

ராடியா - கனிக்கு (கனிமொழி) தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தயாநிதி மாறன் கேபினட் அமைச்சராக இருக்கும்போது நீ இணை அமைச்சராக இருப்பது சரியல்ல என்று கனியிடம் அழகிரி கூறி வருகிறார்.

பர்கா - அப்படியா

ராடியா- அதேசமயம், மாறனும், நான்தான் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரே நபர் என்று அனைவரிடமும் (காங்கிரஸ் வட்டாரத்தில்) கூறிக் கொண்டிருக்கிறார்.

பர்கா - அது எனக்குத் தெரியும்.

ராடியா - ஆனால் அது சரி இல்லைதானே?

பர்கா -இல்லை, அதை நான் அறிவேன்.

பர்கா - ஆனால், மாறன் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று கருணாநிதியிடம் காங்கிரஸ் கூற வேண்டியது அவசியம்.

பர்கா - ஓ.கே. அதுகுறித்து மீண்டும் அவர்களுடன் பேசுகிறேன்.

ராடியா - ஆமாம், யார் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன். பாலுவுக்கு ஒரு ஒதுக்கீடு அவசியம். அதுகுறித்து அவர்களிடம் சொல்வது அவசியம். மாறன் பற்றி நாங்கள் எதுவும் இப்போது பேசவில்லை.

--

2வது அழைப்பு - 2009, மே, காலை 10.47

ராடியா - பர்கா, காங்கிரஸ் தரப்பில் நடப்பதை நேற்றே சொன்னேன். காங்கிரஸ் தரப்பிலிருந்து யார் திமுகவுடன் பேசி வருகின்றனர் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

பர்கா - ஆமாம், அனேகமாக மாறனாக இருக்கும்.

ராடியா - ஆனால் கட்டமைப்புத் துறையை மாறனுக்கோ அல்லது பாலுவுக்கோ தர முடியாது என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பர்கா - இல்லை,அதை அவர்களே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

ராடியா- பிரதமரே அதைச் சொல்லியுள்ளார்.திமுகவுக்கு தொழிலாளர் நலத்துறை, உரத்துறை, கெமிக்கல், தொலைத் தொடர்பு மற்றும் ஐடி தருவதாக கூறியுள்ளனர். ராஜாவுக்கு ஐடி, தொலைத் தொடர்பு தருவதாக கூறியுள்ளனர். இதை கருணாநிதிக்கும் தெரிவித்து விட்டனர்.

பர்கா - அப்படியா !

ராடியா - மாறன் உண்மையைப் பேசுவதில்லை என்பதால் நேரடியாக அவர்கள் கூறியிருக்கக் கூடும்.

பர்கா - இல்லை, மாறன் மூலமாகவே இதை அவர்கள் கூறியிருப்பதாக கருதுகிறேன்.

ராடியா - இப்போது அவர்கள் கனியுடன் பேச விரும்புகின்றனர். பின்னர் அவரது தந்தையுடன் பேச விரும்புகின்றனர். ஏனென்றால் பிரதமருடன் கருணாநிதி பேசியபோது கனிதான் மொழி பெயர்த்துக் கூறினார். அது 2 நிமிடமே நடந்த குறுகிய சந்திப்பு.

நீங்கள் கூறுவதை ஆலோசிக்கிறேன்.அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் கூறினாராம்.

பர்கா - அவர்கள் ஆர்சிஆரிலிருந்து (டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை இல்லம், அதாவது பிரதமரின் இல்லம்) அவர்கள் வந்தவுடன் நான் பேசுகிறேன்.

ராடியா - அவர் (கனிமொழி) என்ன நினைக்கிறார் என்றால் யாராவது ஒரு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், தன்னுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார்.

பர்கா- அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் ஆசாத்துடன் பேசுகிறேன். ஆசாத் வெளியில் (பிரதமர் இல்லத்திலிருந்து ) வந்தவுடன் நான் பேசுகிறேன்.

3வது அழைப்பு - மே 22, பிற்பகல் 3.31 மணி

ராடியா - அவருடன் (கனிமொழி) அவர்கள் பேசுகிறார்களா?

பர்கா - ஆமாம். பேசுகிறார்கள்.

ராடியா - யார், குலாமா (குலாம் நபி ஆசாத்)?

பர்கா - குலாம்தான்.

ராடியா - ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர் (கனி) ஐந்து மணி விமானத்தில் ஏறி அவர் சென்னை போகப் போகிறார். ராஜா மட்டுமே பதவியேற்பு விழாவில் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா) பங்கேற்க கட்சி மேலிடம் கூறியுள்ள போதிலும், தயாநிதி மாறனும் கலந்து கொள்கிறார். இதுகுறித்து கருணாநிதியை சந்தித்த அவர், தன்னை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அகமது படேல் குறிப்பிட்டுக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பர்கா - ஆனால் இது உண்மை அல்ல என்று அகமது கூறியுள்ளார்.

ராடியா -ஆனால் கருணாநிதி பெரும் குழப்பத்தில் உள்ளார்.

பர்கா - இல்லை, கனியும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாமே?

ராடியா - இல்லை, தனது தந்தை சொல்லி விட்டதால் பங்கேற்க கனி விரும்பவில்லை. இதனால் திரும்பப் போகிறார். தந்தை சொல்வதைத்தானே அவர் கேட்க முடியும். குலாமிடம் பேசுகிறீர்களா?

பர்கா - இப்போதே அவரிடம் பேசுகிறேன்.

ராடியா - கனி ஐந்து மணிக்குக் கிளம்புகிறார், ஐந்து மணிக்கு அவருக்கு விமானம், மறந்து விட வேண்டாம்.

4வது அழைப்பு-2009, மே 22, மாலை 6.09

பர்கா - காங்கிரஸின் நிபந்தனை என்னவென்றால், பாலுவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறை கூடாது என்பதே. பாலு என்றில்லை, திமுகவுக்கு அந்தத் துறை கிடையாது. சரியா?

ராடியா - சரிதான். ஆனால் பாலு போன்றோர் தனி நபர்கள் அல்லவே. நேற்று வரை 3 பிளஸ் 4 என்று பேசி வந்தனர். ஆனால் பின்னர் மாறனையும் சேர்த்து 4 பிளஸ் 3 என்று பேசினர்.

பர்கா- ஓ.கே.

ராடியா - தற்போது மீண்டும் 3 பிளஸ் 4 என்ற நிலைக்கே மீண்டும் வந்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்து பேசியதுதானே?

பர்கா - இல்லை, அப்படியானால், இது ஏன் முதலிலேயே அவர்களுக்கு சரி என்று படவில்லை?

ராடியா - அழகிரியால்தான். அழகிரியை அமைச்சராக்குவதாக இருந்தால் அவருக்கு கேபினட் கிடைக்காது. (பர்கா குறுக்கிட்டு அப்படியா என்கிறார்), ஆமாம், அவருக்கு கேபினட் கிடையாது.

பர்கா - அப்படியானால் அழகிரிக்கு என்ன தரப் போகிறார்கள்?

ராடியா - அவருக்கு சுகாதாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதுவும் கூட கேபினட் பொறுப்பு அல்ல. மாறன் கிடையாது, ராஜா கிடையாது, பாலுவும் கிடையாது.

பர்கா - அழகிரிக்கு சுகாதாரத் துறை கொடுத்ததே காங்கிரஸ் செய்த மிகப் பெரிய தியாகம்தான். காரணம், திமுகவுக்கு சுகாதாரத் துறை கிடையாது என்று முதலில் காங்கிரஸ் கூறி வந்தது. இப்போது அவர்கள் விட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால் அழகிரிக்கு சுகாதாரத் துறை, கேபினட் பொறுப்பு தர முடியாதா என்ன?

ராடியா - ஒத்துக் கொள்கிறேன். அப்படியானால் ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவியே கிடைக்கும். அதேபோல பாலுவுக்கும் இணை அமைச்சர் பதவி தானா?

பர்கா - இல்லை இல்லை. பாலுவுக்கு கனரக துறை கிடைக்கலாம். அப்படிக் கிடைத்தால் அழகிரிக்கு உரத்துறை கிடைக்கும். ஒருவேளை பாலுவுக்கு உரத்துறை கிடைத்தால், அழகிரிக்கு இந்த சுகாதாரத் துறை கிடைக்கும்.

ராடியா - மாறனுக்கு தொலைத் தொடர்பு ஐடி துறை.

பர்கா - ஆமாம். ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவி.

ராடியா - யாருக்கு?

பர்கா - ராஜாவுக்கு, இல்லையா?

ராடியா - இல்லை இல்லை, அப்படி இல்லை, என்னை நம்புங்கள்

4வது அழைப்பு - 2009, மே 22, இரவு 7.23

பர்கா - பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தரப்பில் அனைவரும் பங்கேற்க போய்விட்டனர். எனவே உயர் மட்டத் தலைவர்களுடன் என்னால் பேச முடியவில்லை. இப்போதுதான் திரும்பி வந்துள்ளேன். இனிமேல்தான் தொடர்ச்சியாக பேசப் போகிறேன்.

ராடியா- கனி இப்போதுதான் சென்னைக்குப் போயுள்ளார். இப்போதுதான் அவரிடம் பேசினேன்.

பர்கா - தயாநிதி மாறன் எங்கே?

ராடியா - பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. அவரை கட்சி மேலிடம் அழைத்து விட்டது. அகமது படேல் என்னை பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அவர் கருணாநிதியிடம் சொன்னபோது, அப்படியானால் நீ காங்கிரஸிலேயே சேர்ந்த விடு என்று கருணாநிதி கூறி விட்டார். இதனால் அவர் பங்கேற்கவில்லை.

ராஜாவை மட்டுமே பங்கேற்குமாறு கட்சி மேலிடம் கூறியதால் அவர் மட்டும் பங்கேற்றார். அவரும் கூட 8.40 மணிக்கு விமானம் ஏறுகிறார்.

இவ்வாறு போகிறது தொலைபேசி உரையாடல்.