tag:blogger.com,1999:blog-3218551357431414342.post197947451651572688..comments2022-05-05T09:50:18.199-07:00Comments on Meiyyan: R.Mukundarajanhttp://www.blogger.com/profile/03157867521833851947noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3218551357431414342.post-12441273783039738482010-08-19T08:38:55.140-07:002010-08-19T08:38:55.140-07:00நன்றி சார்.
வேலு நாச்சியார் 1730-ல் பிறந்தார் (அந...நன்றி சார்.<br /><br />வேலு நாச்சியார் 1730-ல் பிறந்தார் (அந்த ஆண்டுதான், 27.1.1730) சிவகங்கை நகரமும் நிர்மாணிக்கப்பட்டது என்பது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படாத வரலாற்றுச் செய்திகள்.<br /><br />நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர் காளையார்கோவில்-கோட்டைமேட்டுப் போரில் வீரமரணம் அடைந்தது 1772-ல். அப்போது நாச்சியார் வயது 42.<br /><br />அதற்குப் பின் எட்டு ஆண்டுகள் விருபாட்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் இருந்துவிட்டு சிவகங்கை வந்து அரசியாக முடிசூட்டிக் கொள்கிறார். அதாவது 1780-ல். அப்போது அவருக்கு வயது 50.<br /><br />அதன் பிறகே மருதிருவர் நடைமுறை ஆட்சியாளர்களாகவும்(defacto rulers), வேலு நாச்ச்சியார் சட்டப்படியான அரசியாகவும் (dejure ruler) அரசு நிர்வாகத்தை (பங்கு போட்டோ, கூட்டணி அமைத்தோ) நடத்தியதாக சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.<br /><br />பெரியமருது - வேலுநாச்சியார் திருமணம் நடந்திருந்தால், இந்தக் காலகட்டத்தில் தான் நடந்திருக்க வேண்டும். அப்போது வேலுநாச்சியார் வயது 50-க்கு மேல். ஆனால், 1748-ல் பிறந்த பெரிய மருதுவுக்கு வயது 32,<br /><br />என்னதான் ராஜதந்திரம் என்றாலும் 50-வயது கடந்த பேரிளம்பெண், தன்னை விட 18 வயது குறைந்த ஒருவரை மணம் செய்து கொள்ள சம்மதிப்பாளா?<br /><br />ஒன்று மேலே குறிப்பிட்ட ஆண்டுக் கணக்கில் பிழை இருக்கவேண்டும். அல்லது இந்தத் திருமணம் (பெருந்திணை?) பற்றிய செய்திகள் வெறும் புனைவுகளாகவே இருக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?<br /><br />அன்புடன்<br />இரா.முera.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.com