அன்புள்ள முதல்வருக்கு
ஆனிமுத்து எழுதுவது
அன்பான என் மகனைச் சிறைக்கு
அனுப்பியதற்கு நன்றி
தலைமைக்கு விலைபோய்
தரங்கெட்ட பேரத்தில்
தனித்து நிற்கும் என்மகனைப் பலர்
தவிக்கவிட்டுச் சிரிக்கின்றார்
பங்கு கொண்ட பேரத்தில்
பங்கு பெற்ற பாவிமகன்
பாதகனாய்த் தெரிகின்றான் சிலர்
பரந்தாமனாய், சீதையாய் சித்தரிக்கப்படுகின்றனர்
கருணையும் நிதியுமுள்ள நீங்கள் அவன்
கணக்கை நேர் செய்யுங்கள்
களப்பலியாக்கி கலங்கிட வைக்காதீர்
நிதியையும், நீதியையும் நிலைநாட்டுங்கள்
கைலாசத்தில் கண்ணீரில் க்லங்கிநிற்கும்
அன்புத்தந்தை ஆனிமுத்து
நன்றி புனைவாளர் திரு.எம்.பாலகிருஷ்ணன்
சிவகங்கை
Saturday, February 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment