Saturday, February 19, 2011

அன்புள்ள மன்னவரே ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள முதல்வருக்கு
ஆனிமுத்து எழுதுவது
அன்பான என் மகனைச் சிறைக்கு
அனுப்பியதற்கு நன்றி

தலைமைக்கு விலைபோய்
தரங்கெட்ட பேரத்தில்
தனித்து நிற்கும் என்மகனைப் பலர்
தவிக்கவிட்டுச் சிரிக்கின்றார்

பங்கு கொண்ட பேரத்தில்
பங்கு பெற்ற பாவிமகன்
பாதகனாய்த் தெரிகின்றான் சிலர்
பரந்தாமனாய், சீதையாய் சித்தரிக்கப்படுகின்றனர்

கருணையும் நிதியுமுள்ள நீங்கள் அவன்
கணக்கை நேர் செய்யுங்கள்
களப்பலியாக்கி கலங்கிட வைக்காதீர்
நிதியையும், நீதியையும் நிலைநாட்டுங்கள்

கைலாசத்தில் கண்ணீரில் க்லங்கிநிற்கும்
அன்புத்தந்தை ஆனிமுத்து

நன்றி புனைவாளர் திரு.எம்.பாலகிருஷ்ணன்
சிவகங்கை

No comments: